சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   புக்கு அணைந்து புரிந்து அலர்
பண் - திருக்குறுந்தொகை   (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=WI0HX_u-5aU

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.095   புக்கு அணைந்து புரிந்து அலர்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;
நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்;
சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை
மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[1]
அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்;
திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்;
உலகமூர்த்தி, ஒளிநிற-வண்ணனைச்
செலவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

[2]
ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்;
பூப் பெய் கூடை புனைந்து சுமந்திலர்;
காப்புக் கொள்ளி, கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[3]
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்;
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்;
ஐயன், வெய்ய அழல் நிற-வண்ணனை
மெய்யைக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[4]
எருக்கு அம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்;
பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்;
தருக்கினால் சென்று, தாழ்சடை அண்ணலை
நெருக்கி, காணல் உற்றார்-அங்கு இருவரே.

[5]
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்;
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்;
உரம் பொருந்தி, ஒளிநிற-வண்ணனை
நிரம்பக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[6]
கட்டுவாங்கம் கபாலம் கைக் கொண்டிலர்;
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்;
சிட்டன் சேவடி சென்று எய்திக் காணிய,
பட்ட கட்டம் உற்றார்-அங்கு இருவரே.

[7]
வெந்த நீறு விளங்க அணிந்திலர்;
கந்தமாமலர் இண்டை புனைந்திலர்;
எந்தை, ஏறு உகந்து ஏறு எரிவண்ணனை,
அந்தம் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[8]
இள எழுந்த இருங்குவளை(ம்) மலர்
பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்;
களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன்
அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

[9]
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்;
அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக்
கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[10]
செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்;
இங்கு உற்றேன்! என்று இலிங்கத்தே தோன்றினான்,
பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list